இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுகள்!!

by Column Editor

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று சொல்லப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணிகளுக்கான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

துணை ஆட்சியர் ,காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

அத்துடன் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் மார்ச் 4, 5 ,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் சென்னை மையத்தில் மட்டும் இத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வுமூலம் 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக முதன்மை தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெறுகிறது.தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்ட நிலையில் இன்று தேர்வு நடைபெறுகிறது. 66 பணியிடங்களுக்கு நடக்கும் இந்த தேர்வை, முதல் நிலை தேர்வில் வென்ற 3,800 பேர் எழுதுகின்றனர்.

Related Posts

Leave a Comment