இன்று முதல் உயர்கிறது ஆவின் பொருட்களின் விலை!!

by Column Editor

ஆவின் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது. ஆவின் பால் அரை லிட்டர் 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் நெய் 535 ரூபாய்க்கும், குல்பி ரூபாய் 30 க்கும் , 200 கிராம் பாதாம் பவுடர் ரூபாய் 100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment