பாலாவின் புதிய படத்தில் மாற்றுத் திறனாளியாக நடிக்கும் சூர்யா!?

by Column Editor

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாலா. இவர் எடுக்கும் படங்கள் யாவும் அசாதாரண கதைக்களத்தைக் கொண்டிருப்பவை. கமர்ஷியல் சினிமா என்ற கூட்டுக்குள் அடைபடாதவர் பாலா.

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியாகியுள்ள படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களின் பட்டியலில் இருக்கின்றன. நந்தா, பிதாமகன், மாயாவி என சூர்யாவின் நடிப்புத் திறமையை மெருகேற்றியதில் பாலாவின் பங்கு மிக முக்கியமானது. இதனால் பாலாவிற்கு, சூர்யாவிற்கும் எப்போதும் மிகப்பெரிய நட்பு இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நீண்ட நாட்களாக பாலா திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்.” என்றும் சூர்யா தெரிவித்தார்.

தற்போது பாலா படத்தின் ஸ்கிர்ப்ட் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். பாலாவின் வழக்கமான கிராமியக் கதைக்களம் என்றும், படத்தில் சூர்யா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதாவது காது கேட்காத வாய்பேசமுடியாத கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறாராம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் வெறித்தனமான நடிப்பை காண உள்ளோம். இதற்காக சூர்யா கடின பயிற்சியில் இறங்கியுள்ளாராம். கோடையில் மதுரையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment