விஜய் சூர்யாவா! வேண்டாம் என்று தூக்கி எறிந்த நடிகை.. ரொம்ப ஆணவம் தான் அம்மணி..

by Lifestyle Editor

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தில் அல்லுஅர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் அறிமுகமாகிய ராஷ்மிகா நல்ல வரவேற்பு கிடைக்காமல் தமிழ் பக்கமே திரும்பவில்லை.

அப்படி நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முதலில் ராஷ்மிகா தான் கமிட் செய்திருந்தார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் பூஜா ஹெக்டே கமிட்டாகி நடித்ததில் சரியான ஸ்கோப் இல்லை என்று புலம்பி வருகிறாராம்.ப் அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கமிட்டாகி பின் விலகினார்.

அதன்பின் பிரியங்கா அருள் மோகன் நடித்தார். மேலும் ஷியாம் சிங்கர் ராய் படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி சாய் பல்லவியுடன் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விலகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. 4 படங்களில் நடித்தால் போதும் என்ற ஆணவத்தில் ராஷ்மிகா தலைக்கேறி இப்படி படங்களை ஒதுக்கி வந்தார்.

Related Posts

Leave a Comment