தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள சிவகார்த்திகேயன்.. படப்பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

by Column Editor

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று தொடங்கியது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், அந்த படத்தை முழுவதுமாக முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தரிங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஹீரோயினாக வெளிநாட்டு பெண் ஒருவரை படக்குழு தேடி வருவதால், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் கே.வி.அனுதீப், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு உடனடியாக துவங்கவுள்ளது. முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் ஒருவருடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment