சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்! அதிர்ச்சியான நடிகை ஜோதிகா..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின் திருமணம் செய்தார். இரு குழந்தைகளுக்கு அம்மாவாகி தற்போது சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் காக்க காக்க படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை அப்படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் பாபி. சூர்யா மீது காதல் குறித்து பேட்டியில் பகிர்ந்துள்ளார்

சிறு வயதில் இருந்தே சூர்யா மீத் ஈர்ப்பில் இருந்தே. அப்போது தான் நான் காக்க காக்க படத்தில் சூர்யாவை நேரில் பார்த்தேன். அங்கு படப்பிடிப்பு நடக்கும் போது உங்களை காதலிக்கிறேன் என்று கூறி லவ் லெட்டர் கொடுத்தேன்.

அதை வாங்கிய சூர்யா ஷூட்டிங்கில் இருந்த இயக்குனர் ஹீரோயின், தயாரிப்பாளர் என அனைவரிடமும் காட்டி விட்டார். அதற்கு சூர்யா, பாபி சாரி நான் ஜோதிகாவை காதலிக்கிறேன் என்று கூறினார்.

இந்த விஷயம் ஜோதிகா காதில் போக என்ன பாபி கொஞ்சம் சீக்கிரம் சொல்லிருக்க கூடாதா என்று சொன்னார். நான் உடனே இப்போகூட ஒன்றுமில்லை நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் சூர்யாவை நான் காதலிக்கிறேன் என்று கூறினேன்.

திருமண வேலைகள் எல்லாமே முடிந்துவிட்டதே என்ன செய்வது என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Related Posts

Leave a Comment