மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு! – இன்று சென்னையில் தொடக்கம்!

by Column Editor

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment