துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் மரணம் – அறிக்கை தாக்கல்

by Column Editor

துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை, நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று விட்டது. அப்போது, புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதன் பின்பு, சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து, 5 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிக்சை நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினரிடம் கோட்டாட்சியார் தண்டாயுதபாணி விசாரணை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Related Posts

Leave a Comment