80 நாய் குட்டிகளை தேடி தேடி கொன்ற குரங்குகள் : அதிர வைக்கும் உண்மை!!

by Lifestyle Editor

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் லாவூல் என்ற கிராமம் உள்ளது. இங்கு அதிகமான குரங்குகளும் , நாய்களும் காணப்படும். அடிக்கடி குரங்குகளுக்கும், நாய்களுக்கும் இடையே சண்டை நிகழ்ந்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் இந்த கிராமத்தில் குரங்கு ஒன்று 80 நாய் குட்டிகளை கொன்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஒரு குரங்கு குட்டியை சில தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொண்டு உள்ளது. அன்றிலிருந்து இந்த கிராமத்தில் உள்ள குரங்குகள் நாய்களை பழிவாங்குவது போல நாய்க்குட்டிகளை தேடித்தேடி கொன்று வருகிறதாம். நாய் குட்டிகளை எடுத்து சென்று மரங்கள், கட்டிடங்கள் போன்ற உயரமான இடங்களுக்கு இடங்களில் இருந்து கீழே வீசி கொல்கிறதாம்.

தற்போது இந்த கிராமத்தில் ஒரு நாய்க்குட்டி கூட இல்லை என்றும் இந்த குரங்குகளின் செயலை கண்டு அதிர்ச்சியில் உள்ளோம் என்றும் அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் இருந்து குரங்குகளை விரட்ட வனத் துறையின் உதவியை நாடியதையடுத்து வனத்துறையினர் அங்குள்ள இரண்டு குரங்கை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment