அரண்மனை 4..குஷ்பு கூட இன்னொரு டாப் நடிகையும் நடிச்சிருக்காங்களாம்!

by Lifestyle Editor

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான “முறைமாமன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுந்தர் சி. தொடர்ச்சியாக “முறை மாப்பிள்ளை”, “உள்ளத்தை அளித்தா”, “மேட்டுக்குடி” மற்றும் “அருணாச்சலம்” என்று பல வெற்றி திரைப்படங்களை தமிழ் திரை உலகுக்கு கொடுத்தவர் தான் இவர்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் வினை மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் “அரண்மனை” என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களை எடுத்த சுந்தர் சி, தற்பொழுது அப்படத்தின் 4ம் பாகத்தை விரைவில் வெளியிட உள்ளார்.

வருகின்ற ஏப்ரல் மாதம் அரண்மனை திரைப்படத்தின் 4ம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு கூடுதல் சிறப்பாக ஒரு பாடலுக்கு கேமியோ கதாபாத்திரத்தில் பிரபல நடிகை குஷ்பு மற்றும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான சிம்ரனும் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment