குக்கர் சாதமா.. வடித்த சாதமா.. எப்படி சமைச்சா உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்..!

by Lifestyle Editor

பாரம்பரியமாக அரிசியை ஊறவிட்டு உலை கொதிக்கவிட்டு அரிசியை சேர்த்து வேகவிட்டு சோறு வடிக்க 45 முதல் 1 மணி நேரம் வரை ஆகும். கேஸ் அடுப்பு வந்த பிறகு தான் இந்த நேரம். அதற்கு முன்பு அடுப்பில் பானை வைத்து சோறு ஆக்கியவர்கள் நம் முன்னோர்கள். இன்று இவை எதுவும் தேவையில்லை. அடுப்பின் அருகில் ஓடி நிற்க தேவையில்லை. உலை அரிசி பொங்கி வராமல் இருக்க குக்கர் பிரஷர் போதுமானதாக உள்ளது. அரிசியையும் தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து இரண்டு அல்லது மூன்று விசில் என அரிசிக்கேற்ப விட்டு எடுத்தால் 10 முதல் 20 நிமிடங்களில் சாதம் தயாராகிவிடுகிறது. அதோடு சாதம் வடிக்கும் சட்டியை எடுத்து வடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உலை அரிசி பொங்காமல் அரிசி சிந்தாமல் சிதறாமல் சாதமாகிறது.

பிரஷர் குக்கர் அல்லது வேகவைத்து வடிக்கும் முறை என எப்படி சமைத்தால் ஆரோக்கியமானது?

பிரஷர் குக்கரில் சமைப்பது எளிதாக இருக்கும். வேகமாக சமைத்து விடலாம் என்றாலும் குக்கரில் சாதம் சமைக்கும் போது இதில் இருக்கும் ஸ்டார்ச் அகற்றப்படுவதில்லை. அது அப்படியே தங்கிவிடும். இதை சாப்பிடும் போது உடலில் கார்போஹைட்ரேட் அப்படியே தேங்கிவிடலாம். தொடர்ந்து கார்போஹைட்ரேட் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஸ்டார்ச் கருதப்படுகிறது.

பிரஷர் குக்கரில் சமைக்கும் போது

சாதம் ஒன்று போல் எல்லாம் சமமாக வெந்திருக்கும்.
அதிக நேரம் வைத்து சமைக்க வேண்டியிருக்காது.
அதிகமாக சமைத்தாலும் சாதம் வடிக்க பிரச்சனை இல்லை
தேவையெனில் குக்கரில் சாதத்தை வைத்து சூடுபடுத்தி கொள்ளலாம்
குக்கரில் சமைக்கும் போது அருகிலேயே நின்று கொள்ள வேண்டியதில்லை

பிரஷர் குக்கரில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பிரஷர் குக்கரில் சமைக்கும் போது அரிசி நன்றாக வேகவைக்கப்படுவதால் இது செரிமானத்தை மேம்படுத்தும் அரிசி நன்றாக வேகுவதால் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற மேக்ரோநியூட்ரியண்ட்கள் அதிகம் பெறலாம். உயர் அழுத்தத்தில் சமைக்கப்படும் போது அரிசியில் இருக்கும் பூஞ்சை மற்றும் பல பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது.

பிரஷர் குக்கரில் சமைப்பதால் உண்டாகும் தீமைகள்

பிரஷர் குக்கரில் இருக்கும் சாதத்தை சாப்பிடும் போது மாவுச்சத்து அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட பிரஷர் குக்கரில் சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிரஷர் குக்கரை விட கஞ்சி வடிகட்டும் பிரஷர் குக்கர், ரைஸ் குக்கர் பயன்படுத்தலாம். இந்த வகை குக்கரில் தண்ணீர் அதிகம் சேர்த்தால் தான் ஸ்டார்ச் வெளியேறும். எனினும் இதை தொடர்ந்து பயன்படுத்தகூடாது.

பாத்திரத்தில் சோறு வடித்து செய்யும் போது

சரியான பதத்தில் வேக வைப்பது சிரமமாக இருக்கும்
பெரிய தீயில் வைக்கும் போது சமைக்கவும் எளிதாக இருக்கும்
அளவு அதிகரிக்கும் போது வேலை அதிகமாக இருக்கும்
வடித்து செய்யும் முறையில் வேலை அதிகமாக இருக்கும் ஆனால் இவற்றில் எதுவுமே ஆரோக்கியத்துக்கு கேடு இல்லை. சற்று மெனக்கெட வேண்டும் அவ்வளவு தான். அதனால் பாத்திரத்தில் சோறு வடித்து செய்யும் போது தீமைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பாத்திரத்தில் சோறு வடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பாத்திரத்தில் உலை வைத்து சாதத்தை வடிக்கும் போது அதில் இருக்கும் மாவுச்சத்து 30 முதல் 40% வெளியேறக்கூடும். மீதி இருக்கும் மாவுச்சத்து உடலுக்கு தேவையான அளவு மட்டுமே. அரிசியில் இருக்கும் ஸ்டார்ச் வெளியேறிவிடுவதால் உடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்துக்கள் மட்டுமே காணப்படும். இது சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். பாத்திரத்தில் வடிக்கும் போது ஒரு கப் சாதம் சாப்பிட்டால் கூட அது நல்லது.

அதனால் எப்போதாவது அவசரத்துக்கு குக்கரில் சாதம் வைத்துகொள்ளலாம். ஆனால் தினமும் குக்கர் சாதம் தவிர்த்து முன்னோர் கால பாரம்பரிய உணவை பாரம்பரிய முறையில் சமைத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்.

Related Posts

Leave a Comment