மார்ச் மாத ராசிபலன்..

by Lifestyle Editor

மேஷம்:

சீரான வளர்ச்சி உருவாகக் கூடிய சிறப்பான காலகட்டம். இதில் திட்டமிடல் மிக மிக முக்கியம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடனிருப்போர் செயல்களில் அலட்சியம் வேண்டாம். ஊதியம், பதவி உயர்வுகள் சிலருக்கு உண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும், நழுவ விட வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வர வாய்ப்பு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.புதிய அறிமுகங்களிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள்.வீடு, வாகனம் வாங்க , புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய தொழிலமைப்பில் பெரும் முதலீட்டை யோசித்து செய்யுங்கள். பங்குவர்த்தகத்தில் நிதானப்போக்கு முக்கியம். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். புதிய திட்டங்களை மேலிடத்தின் அனுமதி இன்றி செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறைகளில் உள்ளோர்க்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்கள் படைப்புத்துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படியுங்கள்.பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, முதுகு, அஜீரண உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.

ரிஷபம்:

வாக்கில் இனிமை இருந்தால், வாழ்க்கை இனிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். புதிய பணிகளில் பொறுப்பு உணர்வு முக்கியம். பணத்தைக் கையாள்வோர் கவனத்தை சிதறவிடாமல் இருப்பது அவசியம். இல்லத்தில் சுமுக சூழல் நிலவும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வாகனம், வீடு மாற்ற, வாங்க யோகம் உண்டு. சகோதர உறவுகளால் சகாயம் கிட்டும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் வளர்ச்சிக்கு உங்கள் தளர்ச்சி இல்லா உழைப்பு முக்கியம். வர்த்தகக் கடன்களை ஆடம்பரத்துக்கு செலவிட வேண்டாம். வீண் முதலீடுகளைத் தவிருங்கள். அரசுத்துறையினர் அகலக்கால் வைப்பது கூடாது. மேலிடத்தின் உத்தரவுகளை கனவிலும் மீற வேண்டாம். யாருக்கும் உத்தரவாதம் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில் பணிபுரிவோர் நிதானத்தைக் கையாள்வது அவசியம். புதிய அறிமுகங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சினிமா, பத்திரிகைத்துறையினர் பொறுமையாக இருப்பது நல்லது. பழைய நட்புகளிடம் வீண் சச்சரவுகள் வேண்டாம். மாணவர்கள் அன்றாடப் படிப்பை வழக்கமாக்குவது அவசியம். வாகனத்தில் வித்தை காட்டல் வேண்டாம். நரம்பு, பரம்பரை நோய் உபாதை, ஒற்றைத் தலைவலி வரலாம். சிவன் வழிபாடு சிறக்கச் செய்யும்.

மிதுனம்:

முயற்சிகளில் தளராமல் செயல்பட்டால் முன்னேற்றம் உருவாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வந்து சேரும். பலகால ஏக்கமான இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூட உத்தரவாதம் கிட்டும். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு. உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். இல்லத்தில் விட்டுக் கொடுத்தால் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியம் வரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். உறவுகளுடன் வாக்குவாதம் தவிருங்கள். குடும்ப ரகசியங்களைப் பொது இடங்களில் பேசவேண்டாம். மிதுனம்:செய்யும் தொழில் வளர்ச்சி பெறத்தொடங்கும். யாருடைய கட்டாயத்தினாலும் தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை. உரிய சட்டநடைமுறைகளிலும் அலட்சியம் கூடாது. அரசியலில் உள்ளவர்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வீர்கள். அடக்கமும் அமைதியுமே ஆதரவைத் தொடரவைக்கும். கூடா நட்பை விலக்குங்கள். அரசுத்துறைகளில் உள்ளோர் பணத்தைக் கையாளவதில் நிதானம் தேவை. யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகள், இசைத்துறையினர், தேடிவரும் வாய்ப்புகளில் பாரபட்சம் பார்க்க வேண்டாம். சின்சியர் உழைப்பே சீரான பலன் தரும். மாணவர்கள் திறமைக்கு உரிய நன்மைகளைப் பெறுவீர்கள். பயணத்தில் வேகம் வேண்டவே வேண்டாம். சுவாசம், அலர்ஜி, பூச்சிக்கடி உபாதைகள் வரலாம். அரங்கன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

கடகம்:

நிதானமாகச் செயல்பட்டால், நிம்மதி நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளால் ஆதரவு கிட்டும். உடனிருப்போரிடம் வறட்டு கௌரவம் வேண்டாம். இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். உறவுகளிடம் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கடுமை தவிருங்கள். தரல்பெறலில் நிதானம் முக்கியம். அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத்துணையிடம் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்ல, நேரான வழியும் நேரடி கவனமும் முக்கியம். புதிய ஒப்பந்தங்களை நிதானத்துடன் படித்துக் கையெழுத்திடுங்கள். அரசியலில் இருப்போர் பிறரை மகிழ்விக்க நினைத்து அவசரவாக்குறுதிகள் தரவேண்டாம். புறம்பேசும் நட்புகளை உடனே விலக்குங்கள். அரசுப்பணி சார்ந்த துறைகளில் உள்ளோர் கவனச் சிதறல் இன்றிச் செயல்படுவது முக்கியம். பணியிட ரகசியங்களை யாரிடமும் பகிராதீர்கள். மாணவர்களுக்கு மனம்போல மதிப்பெண்கள் கிட்டும். கலைஞர்கள், படைப்பாளிகள் செல்லும் இடங்களின் சட்டதிட்டங்களை மதியுங்கள். சிறுவாய்ப்பையும் சின்சியராகச் செய்யுங்கள். வாகனப் பழுதில் அலட்சியம் வேண்டாம். பற்கள், கண்கள், தொற்றுக்காய்ச்சல் பிரச்னைகள் வரலாம். வேங்கடவன் வழிபாடு விசேஷ நன்மை தரும்.

சிம்மம்:

அமைதியாகச் செயல்பட்டால், அநேக நன்மைகள் கிட்டும் காலகட்டம். தலைகனத்தைவிட தன்னம்பிக்கையே நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வறட்டு கௌரவம் வேண்டாம். முறையாக செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் உங்கள் தலையீடு கூடாது. கோப்புகளில் கையெழுத்திடும் பொறுப்பில் உள்ளோர் கவனமாக இருங்கள். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். வாழ்க்கத்துணையுடன் அன்யோன்யம் ஏற்படும். விலகி இருந்த உறவுகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகளிடம் கவனமாக இருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. சுபகாரியங்களில் நிதானம் முக்கியம். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் முழுகவனம் முக்கியம். ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். பங்குவர்த்தகத்தில் அனுபவம் இன்றி இறங்க வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவும். மேலிடத்தின் ஆதரவால் பதவி, பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. அரசுத்துறையில் இருப்பவர்கள் பொறுமையாக இருந்தால் பெருமைகள் சேரும். பணியிடத்தில் பணிவுடன் இருப்போர் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். கலைஞர்களும் படைப்பாளிகளும் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிற்றின்ப நாட்டம் சீரழிக்கும் உடனே உதறுங்கள். மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். வாகனப்பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். தூக்கமின்மை, மூட்டுவலி, பல் உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.

கன்னி:

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம். அதேசமயம் பொறுப்புகளில் நேரடி கவனம் முக்கியம். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உடனிருப்போர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். இடமாற்றம், பொறுப்பு, பதவி மாற்றங்கள் வரலாம். அது நன்மைக்கே. இல்லத்தில் ஒற்றுமை நிலவும். உறவுகளிடையே வீண் ரோஷம் பார்க்க வேண்டாம். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் கைகூடி வரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பொது இடங்களில் குடும்ப விஷயம் பேசுவதைத் தவிருங்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் வளர்ச்சிக்கு உங்கள் முயற்சிகளே முக்கியம். புதிய முதலீட்டை சற்று தள்ளிவையுங்கள். வங்கிக் கடன்பெற நேர்வழியே நல்லது. அரசியலில் இருப்போர்க்கு அவசரம், அலட்சியம் ஒருபோதும் கூடாது. மேலிடத்திடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்கள் தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது. பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். கலைத்துறை, பத்திரிகைத் துறையினருக்கு முயற்சிகளுக்கு ஏற்பவே வாய்ப்புகளும் வரும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது நல்லது. தேவையற்ற இரவுப்பயணம் தவிருங்கள். தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

துலாம்:

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், தடைகள் தகரும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு நழுவிப்போகலாம். அது நன்மைக்கே. கையெழுத்திடும் பணியில் கூடுதல் கவனம் முக்கியம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அது நிலைக்க உங்கள் வார்த்தைகளில் கடுமை தவிருங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. தரல்பெறலில் நிதானம் முக்கியம். அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், தடைகள் தகரும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு நழுவிப்போகலாம். அது நன்மைக்கே. கையெழுத்திடும் பணியில் கூடுதல் கவனம் முக்கியம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அது நிலைக்க உங்கள் வார்த்தைகளில் கடுமை தவிருங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. தரல்பெறலில் நிதானம் முக்கியம். அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள்.

விருச்சிகம்:

சோம்பலின்றி உழைத்தால் வளர்ச்சி காணக்கூடிய சிறப்பான காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடனிருக்கும் யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும், நழுவ விட வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வர வாய்ப்பு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். வீடு, வாகனம் வாங்க , புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். பாரம்பரியத் தொழிலமைப்பில் முதலீட்டை யோசித்து செய்யுங்கள். பங்குவர்த்தகத்தில் நிதானப்போக்கு முக்கியம். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். புதிய திட்டங்களை மேலிடத்தின் அனுமதி இன்றி செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறைகளில் உள்ளோர்க்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்கள், படைப்புத்துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். சஞ்சலமும் சபலமும் கனவிலும் வேண்டாம். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அனுமனை ஆராதிப்பது, ஆனந்தம் சேர்க்கும்.

தனுசு:

தளரா முயற்சிகள் இருந்தால், தடைகள் தகரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வந்து சேரும். பலகால ஏக்கமான இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தெரியும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உண்டு. இல்லத்தில் இனிமை சேரும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியம் வரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழில் வளர்ச்சி வரத்தொடங்கும். யாருடைய கட்டாயத்தினாலும் அவசரக்கையெழுத்திட வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு அடக்கமும் அமைதியுமே ஆதரவைத் தொடரவைக்கும். கூடா நட்பை விலக்குங்கள். அரசுத்துறைகளில் உள்ளோர்க்கு எந்த சமயத்திலும் நிதானம் தேவை. யாரிடமும் வீண் கோபம் வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகள் தேடிவரும் வாய்ப்புகளில் பாரபட்சம் பார்க்க வேண்டாம். சின்சியர் உழைப்பே சீரான பலன் தரும். மாணவர்கள் திறமைக்கு உரிய நன்மைகளைப் பெறுவீர்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். கண்கள், பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

மகரம்:

திட்டமிட்டு செயல்பட்டால் கணிசமான நன்மைகள் வரும் காலகட்டம். எந்த சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூடாது. அலுவலகத்தில் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். பதவி, ஊதிய விஷயங்களில் இப்போதைய பொறுமையே எதிர்கால ஏற்றமாகும். பிறர் விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். சிலருக்கு வெளியூரில் இருந்து நற்செய்திகள் வரும். வாழ்க்கைத்துணையுடன் விட்டுக் கொடுத்தல் மிகமிக முக்கியம். புதிய அறிமுகங்களிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். தேவையற்ற கடன்களை வாங்க வேண்டாம். அசையும், அசையா சொத்துகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் புதிய நபர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். வர்த்தகக் கடன்களை தேவைக்கு மட்டும் வாங்குங்கள்.அரசியலில் உள்ளோர்க்கு வாக்கில் நிதானம் முக்கியம். புறம் பேசுவோரைப் புறம் தள்ளுங்கள். அரசுத்துறையில் பணிபுரிவோர், கவனத்தை ஒரு நிலைப்படுத்துவது நல்லது. யாரிடமும் பணி சார்ந்த ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைஞர்கள், படைப்புத்துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் மறதியை விரட்ட, அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். முதுகு, அடிவயிறு,தோள்பட்டை, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, செழிப்பு தரும்.

கும்பம்:

பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால், பெருமை பெறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் தன்னம்பிக்கையை அதிகரித்து, தலைகனத்தைத் தவிர்ப்பது அவசியம். உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் தேடிவரும். உடனிருப்போர் பிரச்னைகளில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். சிலருக்கு பணி மாறும் வாய்ப்பு வரலாம், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். வீட்டில் சீரானபோக்கு நிலவும். உறவுகளிடையே வீண் ரோஷம் பார்க்க வேண்டாம். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிக்கு உங்கள் முயற்சிகளே முக்கியம். புதிய முதலீட்டை சற்று தள்ளிவையுங்கள். வங்கிக் கடன்பெற நேர்வழியே நல்லது. அரசியலில் இருப்போர்க்கு அவசரகதி செயல்கள் கூடாது. மேலிடத்திடம் பேசும்போது நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்கள் தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது. கையெழுத்திடுகையில் கவனம் முக்கியம். கலைத்துறை, பத்திரிகைத் துறையினருக்கு முயற்சிகளுக்கு ஏற்பவே வாய்ப்புகளும் வரும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது நல்லது. தேவையற்ற இரவுப்பயணம் தவிருங்கள். அடிவயிறு,கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பைரவரை எப்போதும் கும்பிடுவது ஏற்றம் தரும்.

மீனம்:

அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பதற்றமும் படபடப்பும் வேண்டாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது ரோஷம் தவிருங்கள். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தால், எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நடக்கலாம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குத்தலும் குதர்க்கமும் தவிர்த்தால் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகளிடம் கடும் சொல் பேசவேண்டாம். உறவுகளால் ஆதாயம் உண்டு. சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். பிறமொழி பேசுவோரிடம் கவனமாக இருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடரும். சட்ட நடைமுறைகளை யாருக்காகவும் மீற வேண்டாம். அயல்நாட்டு ஒப்பதங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசுப்பணி புரிவோர், திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவீர்கள். எதிர்கால ஏற்றத்திற்கு இப்போது உழைப்பே முதலீடு என உணருங்கள். அரசியல்சார்ந்தவர்கள், உடனிருப்போர் யாரையும் பகைக்க வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகள் திறமை இருந்தாலும் முயற்சிகளும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம். மன அழுத்தம், தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி உபாதைகள் வரலாம். உணவை முறைப்படுத்துங்கள். நரசிம்மர் வழிபாடு, நன்மை சேர்க்கும்.

Related Posts

Leave a Comment