திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்…

by Lifestyle Editor

ஆறுபடை வீடுகளில், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் கோவில் தான். சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் இதுவாகும். சூரனை வென்றதால், “ஜெயந்திநாதர்” என்ற பெயரில் இங்கு முருகன் அருள்பாலிக்கிறார்.

சண்முகர் வடிவில் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம் இதுவாகும். முருகனின் வீரத்தை கொண்டாடும் “கந்த சஷ்டி” விழா இங்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மூலவர் சந்நிதியின் பின்புறம் ஐந்து லிங்கங்கள் உள்ளன. முருகனின் முக்கிய படைத்தலைவனான வீரபாகுவுக்கு தனி சன்னதி உள்ளது. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், நாக தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கடல் அலைகள் கோவிலின் கருவறை வரை வந்து செல்வது இங்கு ஒரு சிறப்பம்சமாகும். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருச்செந்தூர் கோவிலை பற்றி 83 பாடல்கள் பாடியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. கோவில் அருகில் ஏராளமான தங்குமிட வசதிகள் உள்ளன. இங்கு தமிழ்நாட்டு சைவ உணவு வகைகள் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment