ஆண்மை அதிகரிக்க.. மாப்பிள்ளை சம்பா அரிசி..

by Lifestyle Editor

உணவை மருந்தாக உட்கொண்டவர்கள் முன்னோர்கள் பளபள பாலீஷ் வகைகளை காட்டிலும் பாதுகாப்பான உணவுகளை பதப்படுத்தாமல் எடுத்துகொண்டவர்கள் என்று சொல்லலாம். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றிலும் பல ரகங்கள் மறைந்து தற்போது 200 வகையான நெல் ரகங்கள் வரை மீட்டிருக்கிறார்கள். சுவைக்காக அல்லாமல் பெரும்பாலும் நோய்களை அண்டவிடாமல் செய்வதில் இவை பெருமளவு உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலையில் ஆண்மையை வலுப்படுத்தவும் ஆரோக்கியம் மேம்படுத்தவும் உதவும் மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.

நமது வரலாற்று நாட்டுப்புறக்கதை ஒன்று உண்டு. பெண்ணை மணமுடிக்க விரும்பினால் வரும் ஆண்களுக்கு பாரம்பரிய வீர விளையாட்டுகள் வைத்து தேர்வு செய்வார்கள். இதன் மூலம் அவர்களது தைரியமும் வலிமையும் வெளிப்படும் என்பது அவர்களது நம்பிக்கை. பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது மாப்பிள்ளைச்சம்பா. தனது உடல் திறனை நிரூபிக்கும் வீரனுக்கு பெண்ணை கட்டி கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதனால் இது மாப்பிள்ளை சம்பா என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்மை அதிகரிக்க மாப்பிள்ளை சம்பா உதவுமா?

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது. உணவே மருந்து என்பது நோய்களுக்கு மட்டுமல்ல, ஆண்மை குறைபாட்டுக்கும் உண்டு. ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும்., உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.

​மாப்பிள்ளை சம்பாவில் இருக்கும் சத்துக்கள்​ :

சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா ஆண்களுக்கு உண்மையில் ஏற்ற அரிசியே. இவற்றில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி1 போன்றவை நிறைந்துள்ளன. ஆண்களுக்கு வலுவை மட்டும் அல்ல ஆண்மையையும் பலப்பருத்தும் தன்மையு இந்த மாப்பிள்ளை சம்பாவுக்கு உண்டு.

இதை சோறாக்கி சாப்பிடுவது சற்று சிரமமானதாக இருக்கலாம். ஆனால் இதை இட்லி, தோசை, பொங்கல், புட்டு போன்று செய்து எடுத்துகொள்ளலாம். சமைப்பதற்கு முன்பு 2 மணி நேரம் ஊறவைத்து சமைக்க வேண்டும்.

மாப்பிள்ளை சம்பா நீரிழிவுக்கு நல்லதா?

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதை தாமதமாக்குகிறது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அடிக்கடி இந்த மாப்பிள்ளை சம்பா சேர்த்து வருவது டைப்2 டயாபடிஸ் அபாயத்தை கட்டுப்படுத்த செய்யும்.

​எடை இழப்புக்கு உதவும் மாப்பிள்ளை சம்பா​ :

மாப்பிள்ளை சம்பா அரிசி கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக இருக்கும். இதுநீண்ட நேரம் திருப்தியாக வைத்திருப்பதால் இடையில் பசி உணர்வு தலைதூக்காது. செரிமானத்துக்கு உதவுவதால் உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்தும். மேலும் வயிற்று கோளாறுகள் மற்றும் குடல் பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.

​புற்றுநோய் அபாயத்தை குறைக்க மாப்பிள்ளை சம்பா உதவுமா?​

மாப்பிள்ளை சம்பா அரிசியில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்க செய்கின்றன. இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவும் .அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

​கொழுப்பை குறைக்கும் மாப்பிள்ளை சம்பா​ :

மாப்பிள்ளை சம்பா இரும்பு மற்றும் துத்தாகத்தின் நல்ல மூலம். இதில் உள்ள புரோ ஆந்தோசயனின்கள் கொழுப்பு மற்றும் ஹைப்பர் கிளைசீமியாவை குறைக்க செய்கிறது, இதில் மெக்னீசியம் அளவு நிறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்த கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. இந்த மாப்பிள்ளை சம்பா தொடர்ந்து எடுப்பதுகரோனரி தமனி நோய் பிளெக் உருவாவதை குறைக்கிறது.

​உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மாப்பிள்ளை சம்பா​ :

மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம் காயங்களை விரைவில் குணப்படுத்த செய்கிறது. மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்துவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்கிறது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

​முன்கூட்டியே வயதான அறிகுறிகளை போக்கும் மாப்பிள்ளை சம்பா​ :

இது ஆற்றலை உருவாக்க கூடியது. முன்கூட்டியே வயதாகும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நமது உடலில் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு தீங்கு நேராமல் பாதுகாப்பதால் வயதான விளைவுகள் தடுக்கப்படுகின்றன. இன்று இளவயதில் வயதான தோற்றம் பெறும் அபாயத்தை பலரும் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி நல்ல தீர்வாக இருக்கும்.

Related Posts

Leave a Comment