திருமந்திரம் – பாடல் 1766: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம்

by Lifestyle Editor

வேண்டி நின்றேதொழு தேன்வினை போயற
வாண்டொரு திங்களும் நாளு மளக்கின்ற
காண்டகை யானோடும் கன்னி யுணரினு
மூண்டகை மாறினு மொன்றது வாமே.

விளக்கம்:

எனது வினைகள் அனைத்தும் நீங்கி அழிந்து விடும் படி இறைவனை வேண்டி நின்று வணங்கினேன். ஆண்டுகள் ஒவ்வொன்றையும் மாதங்கள், நாட்கள் என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை கண்டு தரிசிக்கும் இயல்போடு இருக்கின்ற நாயகனாகிய இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற என்றும் இளமையான இறைவியையும் உணர்ந்து தொழுதாலும், தமது உடலின் இயல்பை கடினமான சாதகங்களால் மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும், இரண்டுமே ஒன்றான ஞான இலிங்கத்தின் வழியாகவே இருக்கின்றது.

Related Posts

Leave a Comment