மாதவிடாய் வயிற்று வலியை போக்க அசத்தல் டிப்ஸ்..!

by Lifestyle Editor

மஞ்சள் பால் உட்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் :

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு கடுமையான வலி உண்டாகும். இந்த வலியை தவிர்க்க சிலர் மாத்திரைகள் எடுத்துகொள்வார்கள். ஒரு சிலரோ வீட்டு வைத்திய முறையை நாடுவார்கள். அப்படியொரு வீடு வைத்தியம் தான் மஞ்சள் பால். இதை பருகுவதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வலி குறைகிறது. இந்த மஞ்சள் பாலை பொன்னிற அல்லது தங்கநிற பால் என்றும் கூறுவார்கள். பாலில் கொஞ்சம் இஞ்சி, மசாலாக்கள் மற்றும் மஞ்சள் பொடியை கலந்து குடிக்க வேண்டும். இதை கர்ப்பிணிப் பெண்களும் பருகலாம். மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தற்போது பார்ப்போம்.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது:

பழங்காலத்திலிருந்து மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தபட்டு வரும் மஞ்சள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மஞ்சளில் உள்ள சர்குமின் தான் இதற்கு மஞ்சள் கலந்து ஆரஞ்சு நிறத்தை தருகிறது. மாதவிடாய் சமயத்தில் மஞ்சள் கலந்த பாலை குடிக்கும் போது ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறுகின்றன. மேலும் மாதவிடாய் சமயத்தில் மஞ்சள் பாலை குடிப்பதால் உடலில் இரும்புச்சத்தை அதிகப்படுத்தி ரத்தசோகை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இதய நலன் :

நமது ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசிரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் பாலை குடிப்பதால் வீக்கம் குறைந்து தமனியில் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது :

மஞ்சள் பாலில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறையவே உள்ளது. இது நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. குறிப்பாக மஞ்சள் பால் பருகினால் டைப்-2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை மெதுவாக்குகிறது. இதனால் உடலில் சர்க்கரை கொழுப்பாக சேராமல் ஆற்றலாக மாறுகிறது. மஞ்சள் பாலில் கொஞ்சமாக இலவங்கப்பட்டை சேர்க்கும் போது கூடுதல் பயனைத் தருகிறது.

குழந்தைப்பேருக்கு நல்லது :

ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதோடு உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் செய்வதால் மஞ்சள் பால் குழந்தைப் பேருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதோடு சேர்த்து தினமும் வைட்டமின் டி மாத்திரை சாப்பிடுவதும் முக்கியமாகும். அப்போதுதான் கர்ப்பைபையில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகமாகும். சமச்சீரற்ற மாதவிடாய் போக்கை குணப்படுத்தி மாதவிடாய் சுழற்சி சரியாக வருவதற்கும் மஞ்சள் பால் உதவுகிறது. ​

செரிமானத்தை மேம்படுத்துகிறது :

மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது. தினமும் கலையில் இந்த மஞ்சள் பாலை குடிப்பது மிகவும் நல்லதாகும். மஞ்சள் பாலில் வைட்டமின், அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ளதால் செரிமானப் பிரச்சனைகள் சீராகின்றன. மஞ்சள் பால் குடிக்கவும் நல்ல சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment