யுபிஐ பணப் பரிவர்த்தனை – அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்..!

by Lifestyle Editor

யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு Failed Transaction-க்கு பிறகு டெபிட் செய்யப்பட்ட பணம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் வங்கி கணக்குக்கு திரும்பி அனுப்பவில்லை என்றால், தாமதாகும் ஒவ்வொரு நாட்களுக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது முதல் நாளில் டெபிட் செய்யப்பட்ட பணம் அடுத்த நாளுக்குள் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மூன்றாம் நாளிலிருந்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி யுபிஐ பணப் பரிவர்த்தனை அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் இதோ..!

ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, Paytm செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல்.

மோசடிகளை தடுக்க 2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு. இதன்மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.

ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் 2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Related Posts

Leave a Comment