ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பொலிஸார் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..

by Lifestyle Editor

ஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு இருப்பது இன்னும் ஐந்து நாட்களே . இதனால் சென்னையை சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டல்கள் , விடுதிகள் என்பன கொண்டாட்ங்களுக்கு தயாராகி வருகின்றன.

மெரினா கடற்கரை , பெசன்நகர் கடற்கரை என்பனவற்றுக்கு அதிகளவான மக்கள் வருகை தருவார்கள் என்ற காரணத்தினால் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பல பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகர பொலிஸாரினால் 31 ஆம் திகதி இரவு 20,000 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் பெண்கள் , சிறுவர்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். ட்ரோன் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment