கொட்டும் கனமழை: 3-வது நாளாக விமான சேவை இரத்து…

by Editor News

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக்கிடப்பதால் விமான சேவை இன்று 3வது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக சென்னை,பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வரும் விமானங்களும் அங்கிருந்து செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கனமழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 23 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment