கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்..

by Lifestyle Editor

தாம்பரம் அருகே ஆயிரக்கணக்கான பால்பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்கள் பல பகுதிகளுக்கு பால் சென்று சேரவில்லை. தற்போது தான் நிலைமை ஓரளவு சீராகி வருகிறது.

இந்த நிலையில் ஒரு பாக்கெட் பாலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதி உற்ற நிலையில் கால்வாயில் உள்ள ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகளை பார்த்து மக்கள் ஆவின் நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment