பண மோசடியில் ஈடுபட்ட பவர்ஸ்டார்..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் இருந்து வந்தார். அக்குபஞ்சர் மருத்துவரான பவர்ஸ்டார் நடிப்பின் மீது இருந்த ஆசையால் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

இதன்படி 2019 வெளியான ‘நீதான அவன்’ எனும் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

இது போன்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த இறால் பண்ணை ஓனரான முனியசாமி என்பவரிடம் 15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி செக் மோசடி செய்துள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிடிவாரண்ட் அளித்துள்ளது. இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment