தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கின்றார் ஏ.ரேவந்த் ரெட்டி

by Lifestyle Editor

தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை ஹைதராபாத்தில் பதவியேற்கவுள்ளார்.

காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று மூத்த தலைவர்களுடன் நடத்த ஆலோசனையின் முடிவில் ரேவந்த் ரெட்டியை நியமிப்பது என கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் பி.ஆர்.எஸ். கட்சி 39 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.

Related Posts

Leave a Comment