முதலில் நன்றியுடன் இருங்கள்.. பருத்திவீரன் பஞ்சாயத்தில் அமீருக்கு தயாரிப்பாளர் ஆதரவு!!

by Lankan Editor

பருத்திவீரன்

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஞானவேல் ராஜா, அமீர் ஒரு திருடன். மார்க்கெட்டில் ஓடாத குதிரை என்று பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் ஆதரவு!!

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பருத்திவீரன் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், அமீர் தரமான தயாரிப்பாளர். அவர் தான் கார்த்தியையும் ஸ்டூடியோ க்ரீன்ஸையும் அடையாளப்படுத்தினார்.

முதலில் அவர்கள் அமீருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அமீர் நாளையே சூர்யா அல்லது கார்த்தி வைத்து படம் எடுத்தால் சில்வர் ஜுப்ளிதான் என்று சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார்.

பருத்திவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான பிரச்சனையின் போது சிவசக்தி பாண்டியன் தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment