மோசமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்

by Lifestyle Editor

சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலி கான் திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இதனை கண்டித்து பல சினிமா பிரபலங்களும் மற்றும் நெட்டிசன்களும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

இது தொடர்பாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் திரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில், ” தவறு செய்வது மனித இயல்பு. மணிப்பதே புனிதம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment