அடுத்த 3 மணிநேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

by Lifestyle Editor

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment