குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி ..!

by Lifestyle Editor

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment