போலந்து நாட்டுப் பெண்ணை காதலித்து கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞர்

by Lifestyle Editor

போலந்து நாட்டுப் பெண்ணை காதலித்து கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் பூசுத்துரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்- புவனேஸ்வரி தம்பதியரின் மகன் அருண்பிரசாத்(32). எம்பிஏ படித்துள்ள இவர் போலந்து நாட்டுக்குச் சென்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்பொழுது தனியாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அருண் பிரசாத்திற்கும் போலந்து நாட்டைச் சேர்ந்த அனியா (எ) அன்னா ரில்ஸ்கா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது. இதனை எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரையும் அணுகி உள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், போலாந்து நாட்டில் முறைப்படி இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து இவர்களது திருமணம் தமிழர் கலாச்சார முறைப்படி நடத்த திட்டமிட்டு பத்திரிக்கை அடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு வழங்கிய நிலையில் இன்று புதுக்கோட்டை திருவப்பூர் அடுத்த அடப்பங்காராசத்திரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சார முறையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மணமகன் மற்றும் மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இனம், மொழி, மதம், கடல் கடந்து வந்த காதலை பெற்றோர்கள் ஆதரித்த நிலையில், போலந்து நாட்டு பெண்ணை புதுக்கோட்டை இளைஞர் கரம் பிடித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Posts

Leave a Comment