திருப்பதியில் அதிகரிக்கும் கூட்டம்… தரிசனத்துக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்…!

by Lifestyle Editor

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி நின்றனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.

Related Posts

Leave a Comment