4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..

by Lifestyle Editor

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் காலியாக இருப்பதாகவும், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் படி வரும் எப்ரல் 15-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், விண்ணப்பிக்க மே 14-ம் தேதி கடைசி நாள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வுக்கு தகுதியானவர்கள் http://trb.tn.nic.in என்ற அசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment