பனிமூட்டத்தால் சென்னையில் விமானங்கள் தாமதம் ..

by Lifestyle Editor

சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலை கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை வரும் விமானங்களும் தாமதமாக தரையிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பனிமூட்டம் காரணமாக கோலாலம்பூர், குவைத்தில் இருந்து வந்த விமானங்கள் சுமார் 30 நிமிடம் தாமதம் ஆகியுள்ளது. சென்னை வந்த விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாமல் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment