3000 கோடியை முதலீடு செய்துள்ள கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம்..

by Lifestyle Editor

கே.ஜி.எஃப் 1, 2 படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஹோம்பலே பிலிம்ஸ்.

அண்மையில் வெளிவந்த காந்தாரா திரைப்படத்தை கூட இவர்கள் தான் தயாரித்திருந்தார்கள்.

இந்த நிறுவனம் அடுத்த 5 வருடத்திற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் வைத்து படங்களை தயாரிக்கவுள்ளது.

5 வருடத்திற்கான பிளான் :

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் ‘டைசன்’, ரக்ஷித் ஷெட்டியின் ‘ரிச்சர்ட் ஆண்டனி’, பகத் பாசில் ‘தூமம்’, ஸ்ரீ முரளி ‘பகீரா’, கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’, மற்றும் கே.ஜி.எஃப் 3 என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இதற்காக சுமார் ரூ. 3000 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அனைத்து படங்களுமே பான் இந்தியா படங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment