2022ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் …

by Lifestyle Editor

கடந்த ஆண்டு அதாவது 2022ல் திருப்பதி எழுமலையான் கோயிலில் ரூ. 1,441.34 கோடி உண்டியல் வசூல் ஆகியுள்ளது.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

2022-ம் ஆண்டு
ஜனவரி – 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்கள்,
பிப்ரவரி- 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள்,
மார்ச் – 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்கள்,
ஏப்ரல் – 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்கள்,
மே – 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்கள்,
ஜூன் – 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்கள்,
ஜூலை – 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்கள்,
ஆகஸ்டு – 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்கள்,
செப்டம்பர் – 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்கள்,
அக்டோபர் – 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்கள்,
நவம்பர் – 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும்,
டிசம்பர் – 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்கள் தரிசித்தனர்.
டிசம்பர் 29-ந்தேதி வரை என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மொத்தமாக 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment