இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா …!

by Lifestyle Editor

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது. நேற்று முன் தினம் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, நிலையில் நேற்று 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 91,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 220 கோடியை தாண்டியுள்ளது.

Related Posts

Leave a Comment