பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம் !

by Lifestyle Editor

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்காக நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் வீடு வீடாக சென்று இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க உள்ளனர். எந்த நாளில், எந்த நேரத்தில் கடைக்கு வர வேண்டும் என்பதை டோக்கனில் குறிப்பிட்டிருக்கும். ஜனவரி 2ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment