ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவிட தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு – தேசிய தேர்வு முகமை …

by Lifestyle Editor

ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே வெற்றி பெற்ற மாணவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது!. தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவதை குறிப்பிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை , அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளித்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment