ஆர்ஆர்ஆர் கொடுத்த சக்சஸ்: சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்திய ராம் சரண் ..

by Lifestyle Editor

ஆர்ஆர்ஆர் படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் தனது சம்பளத்தை ரூ.100 கோடி வரையில் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராம் சரண். கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிறுத்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மகதீரா, நாயக், த்ருவா, புரூஸ்லீ, கைதி நம்பர் 150 என்று பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பாடல் மட்டும் அல்ல அந்தப் பாடலுக்கு வரும் நடனத்திற்கும் அடிமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அந்த நடனத்தை ஆடி வீடியோ எடுத்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்த படத்தில் ராம் சரணுக்கு ரூ.45 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இந்த படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்தப் படம் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் தற்போது தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி, ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் அக்‌ஷய் குமார், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு ஏன் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோரும் கூட ரூ.100 கோடி வரையில் சம்பளம் வாங்குகின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம் சரணின் 15ஆவது படமான ஆர்சி15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கிரா அத்வானி நடிக்கிறார். இந்தப் படத்திற்கே ராம் சரணுக்கு ரூ.100 கொடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் மட்டுமின்றி புஜ்ஜி பாபுவின் அடுத்த படத்திலும் நடிக்கிறார்.

Related Posts

Leave a Comment