அடையாற்றில் மூழ்கி மாயமான 9ம் வகுப்பு மாணவன் – தேடும் பணி தீவிரம்

by Lifestyle Editor

சென்னை சைதேப்பேட்டையில் அடையாற்றில் மூழ்கி மாயமான 9ம் வகுப்பு மாணவனை இரண்டாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் நேற்று மாயமானான். மாணவன் நீரில் மூழ்கியதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தீயணைப்பு வீரர்கள் அந்த மாணவனை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து மீட்பு பணி நிறுத்தப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடையாறு ஆற்றில் 9ம் வகுப்பு மாணவன் மாயமான சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment