ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் ..

by Lifestyle Editor

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் வங்க கடலில் ஏற்படும் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment