டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Lifestyle Editor

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஜி- 20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு ஜி- 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் 32 பிரிவுகளில் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சென்னையில் ஜி 20 கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related Posts

Leave a Comment