வளிமண்டல சுழற்சி – தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்

by Lifestyle Editor

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். காற்று திசை மாறுபாட்டினால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 4ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் . இதனால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆறு மாவட்டங்களில் நேற்றைய தினமும் இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment