அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா ..

by Lifestyle Editor

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார் .

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் ப்ரியா, ‘அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் திமுக ஆட்சியில் சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது .

ஆனால் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இருப்பினும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தார் .

அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து எப்படி செயல்பாட்டில் உள்ளதோ அதேபோல் இனியும் தொடரும் என்றும் பயன்பாட்டில் இல்லாத ஒருசில அம்மா உணவகங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவலை அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment