தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு ..

by Lifestyle Editor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது இன்று காலை 10.30 மணியில் இருந்து சிறிது நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்திருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அண்ணாமலை விவாதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி ஆளுநரை அண்ணாமலை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது .

Related Posts

Leave a Comment