மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

by Lifestyle Editor

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இதற்காக மின்வாரிய அலுவலகங்களில் காலை 10:30 மணி முதல் மாலை 5 .15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. பண்டிகை தினத்தை தவிர்த்து ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள வீடு மற்றும் கைத்தறி, விசைத்தறி,குடிசை, விவசாய மின் இணைப்பு தாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பது தொடர்பாக மின்சாரம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை, விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதார் உடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இது குறித்த நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இன்று முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு உள்ளது .

பண்டிகை தினங்கள் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5. 15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களின் மூலமாக தங்களின் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment