விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடிக்கு திருமணம் முடிந்துவிட்டதா

by Lifestyle Editor

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படங்களின் வெற்றிக்கு இவர்களது கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். இப்படங்கள் ரிலீசுக்கு பின் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானதால், இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான் என்றே நெட்டிசன்கள் உறுதி செய்துவிட்டனர். சமீபத்தில் கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவு சென்றதாக கூறப்பட்டு வந்தது. இவ்வாறு இவர்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அதிகளவில் நெகடிவிட்டு பரப்பப்பட்டு வருவதாக நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். அதில் சினிமா வட்டாரத்தில் தான் நட்புடன் பழகுவதையும் தவறாக சித்தரிக்கப் படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மணக்கோலத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இது அவர்களது திருமண புகைப்படம் என நினைத்து சில வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment