பொன்னியின் செல்வன் 2 காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்! என்ன காரணம்?

by Lifestyle Editor

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

பாக்ஸ் ஆபிசில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

2ம் பாகம்

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என மணிரத்னம் அறிவித்து இருக்கிறார்.

2ம் பாகத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது மணிரத்னம் சில காட்சிகளை மீண்டும் எடுக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஷூட்டிங் சுமார் ஏழு முதல் பத்து நாட்கள் நடைபெறலாம் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment