விவாகரத்துக்கு பின் தனுஷ் மனைவியுடன் இணைகிறேனா? சிம்பு கூறிய உண்மை இதுதான்..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் சமீபத்தில் 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த ரஜினிகாந்தின் மகளை பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் செய்தியை அறிவித்தார்.

இது அனைவருக்கும் மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததுடன் இதற்கு காரணம் என்று பல கோணங்களில் கருத்ஹ்டுக்களை தெரிவித்து இணையத்தில் செய்திகளாக பரவியது. தற்போது தனுஷ் ஐஸ்வர்யா அவர்களின் வேலைகளில் மும்முரமாக பணியாற்றி வரும் நிலையில், ஐஸ்வர்யா நடிகர் சிம்புவுடன் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வைரலானது.

தற்போது பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பழிவாங்க அடுத்து சிம்புவை வைத்து இயக்கவுள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று அனைவருக்கும் புரியாத புதிராக இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் எந்த உண்மையும் இல்லை. முழுக்க முழுக்க வதந்தி தான் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment