தொழிலபதிபரை மணந்தார் நடிகை மற்றும் பாடகி ஸ்வகதா கிருஷ்ணன்!

by Column Editor

இசைக் கலைஞரும் நடிகையுமான ஸ்வகதா எஸ் கிருஷ்ணன் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தனது திருமண விழாவின் படங்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்வகதா, “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன், நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று தெரிவித்துள்ளார்.

“மரியாதை, சமத்துவம் மற்றும் அன்புடன் இந்தப் பயணத்தைத் தொடங்கும்போது உங்கள் ஆசீர்வாதங்களுக்காக நானும் எனது இணை அக்ஷயும் அனைவருக்கும் நன்றி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஸ்வகதா தனது சகோதரியும் நடிகையுமான மாயா கிருஷ்ணனுடன் ‘இன்ட்ரா’ என்ற தலைப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

Related Posts

Leave a Comment