சொந்தக்குரலில் தெலுங்கில் குரல் கொடுக்கும் சூர்யா… ‘எதற்கும் துணிந்தவன்’ குறித்து சூப்பர் அப்டேட்

by Column Editor

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கை நடிகர் சூர்யா சொந்த குரலில் பேசியுள்ளார்.

சூர்யாவின் அதிரடியில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேபோன்று படத்தின் அப்டேட்டுகளும் வேற லெவலில் வந்துக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் வரும் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அதேபோன்று டி இமான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தெலுங்கு டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த தெலுங்கு டப்பிங்கை நடிகர் சூர்யா, தனது சொந்த குரலில் கொடுத்து வருகிறார். இது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment