‘கோமாளி’ இயக்குநரின் புதிய படத்தில் இணைந்த நடிகர் சத்யராஜ்!

by Column Editor

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறும்படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சில மாதங்களுக்கு தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்று படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கதாநாயகன் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment