மஹாராஷ்டிராவில் திரளான மக்களுக்கு பார்வையிடப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படம்!

by Column Editor

மஹாராஷ்டிராவில் ஜெய் பீம் திரைப்படம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சான் ரோல்டன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்திருந்தன. சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார். மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்திருந்தார். இவ்வளவு அழுத்தமான கதையில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடித்துள்ளதை அடுத்து அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் லதூர் பகுதியில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதை பல நூற்றுக் கணக்காக மக்கள் பார்த்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதிகள் ஜெய் பீம் படத்தின் மூலம் பலரைச் சென்றடைவது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment